'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

பைசன் படத்தை அடுத்து தனது புதிய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். விருதுநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கியுள்ளார் மாரி செல்வராஜ். அதில் அவர் பேசும்போது, பைசன் படத்திற்கு பிறகு அடுத்து இயக்கும் படத்திற்கான கதை வேலைகளில் ஈடுபட்டுள்ளேன். அதோடு ரசிகர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. முதல் படத்தை இயக்கும்போதே நான் எங்கிருந்து வருறேன் என்பதை கூறிவிட்டுதான் படத்தை தொடங்கினேன். என்னை பொருத்தவரை எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இப்போதைக்கு நான் அரசியலில் இல்லை. என்றாலும் எதிர்காலத்தில் அரசியல் இயக்கம் தொடங்கினால் சாதிக்கு எதிராகத்தான் தொடங்குவேன் என்றும் அந்த மேடையில் பேசி இருக்கிறார் மாரி செல்வராஜ் .




