கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. அதையடுத்து அவரது நடிப்பில் புறநானூறு என்ற படத்தையும் இயக்க தயாரானார். ஆனால் திடீரென்று அந்த படத்தில் இருந்து சூர்யா வெளியேறினார். கதை பிடிக்காமல் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக அப்போது செய்திகள் வெளியாகின. இதனால் சூர்யா நடிக்க மறுத்த புறநானூறு கதையை பராசக்தி என்ற பெயரில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி இருக்கிறார் சுதா. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரப்போகிறது.
இந்த நிலையில், சுதா அளித்துள்ள ஒரு பேட்டியில் , புறநானூறு படத்தில் இருந்து சூர்யா வெளியேறியது ஏன்? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ஒரு பதிலளித்துள்ளார். அதில், கொரோனா காலகட்டத்தில் இந்த கதையை தயார் செய்தேன். போனிலேயே கதையை சொன்னேன். கதையை கேட்டவர், அதில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டதால் அதையடுத்து புறநானூறு கதை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஆனால் திடீரென்று என்னை தொடர்பு கொண்ட சூர்யா, தொடர்ச்சியாக என்னால் இந்த படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தர முடியாது என்று கூறினார். ஆனால் தயாரிப்பாளரோ, தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த வேண்டும். அடுத்தடுத்து பிரேக் கொடுத்து படப்பிடிப்பு நடத்தினால் செலவு அதிகமாகும் என்று கூறினார். இந்த விஷயத்தில் சூர்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால்தான் அவர் புறநானூறு படத்தில் இருந்து வெளியேறினார் என்று கூறியுள்ளார் சுதா கெங்கரா.




