வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தமிழில் 'திமிரு, மரியான்' மற்றும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரஜினியுடன் இணைந்து நடித்த 'ஜெயிலர்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மலையாள நடிகர் விநாயகன். சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'களம்காவல்' படத்தில் மம்முட்டி வில்லனாகவும் இவர் கதாநாயகனாகவும் நடித்து ஆச்சரியப்படுத்தி இருந்தார். இன்னொரு பக்கம் 'ஜெயிலர் 2' படத்திலும் தான் இருப்பதாக கூறி ரசிகர்களிடம் இன்னொரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த நிலையில் தற்போது ஏற்கனவே மலையாளத்தில் 'ஆடு, ஆடு 2' என இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தற்போது அதன் மூன்றாம் பாகமாக 'ஆடு 3' என்கிற பெயரில் உருவாகி வருகிறது, இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கும் இந்த படத்தில் நடிகர் விநாயகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வருகிறது.
இதன் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும்போது நடிகர் விநாயகனுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கொச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தசையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய பின் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.




