'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

பிரபல மலையாள வில்லன் நடிகர் விநாயகன். தமிழில் விஷாலின் ‛திமிரு', ரஜினியின் ‛ஜெயிலர்' போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். விநாயகன் என்றாலே வில்லங்கமும், பிரச்னைகளும், பஞ்சாயத்துகளும் தான். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வழக்கு பதிவாகி, பின்னர் மன்னிப்பு கேட்பார்.
சமீபத்தில் கேரள முன்னாள் முதல்வர் விஎஸ் அச்சுதானந்தன் காலமானார். இதுதொடர்பான நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய விநாயகன், ‛‛இறக்கவில்லை... இறக்கவில்லை... எனது தலைவர் அச்சுதானந்தன் இறக்கவில்லை.... எங்களுடன் வாழ்கிறார்'' என முழக்கமிட்டார்.
தொடர்ந்து வலைதளத்தில் தனது நாய் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ‛‛காந்தியும் இறந்தார், நேருவும் இறந்தார், இந்திரா, ராஜீவ்வும் இறந்தனர் என இன்னும் சில தலைவர்களின் பெயரையும் குறிப்பிட்டு சில அவதூறு கருத்துக்களை வெளியிட்டார். இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எர்ணாகுளம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிஜோ ஜோசப், கேரள டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார்.
நடிகர் விநாயகன் மறைந்த தேசிய தலைவர்களை சமூக வலைதளத்தில் இழிவுபடுத்தி உள்ளார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் மனவேதனையையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.