'தலைவன் தலைவி' தெலுங்கு ரிலீஸ் : ஆகஸ்ட் 1க்கு தள்ளி வைப்பு | 250 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | வார் 2 டிரைலர் : 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வைகள் | 'ரட்சகன்' பார்த்து நாகார்ஜுனா ரசிகரான லோகேஷ் கனகராஜ் | ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் |
பழம்பெரும் நடிகை கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷ்ணம், இவர் நாடக ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கண்ணாம்பா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதாவது இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இல்லறத்தில் இணைந்தனர்.
பின்னாளில் கண்ணாம்பா நடிகையாக உயர்ந்தார். நாகபூஷ்ணம் இயக்குனர் ஆனார். கணவரின் படங்களை தயாரிப்பதற்காக ஸ்ரீராஜேஷ்வரி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கணவர் இயக்கிய படங்களை தயாரித்தார் கண்ணாம்பா.
தமிழில் ஹரிச்சந்த்ரா, துளசி ஜலந்தர், நவஜீவனம், சவுதாமினி, ஏழை உழவன், லட்சுமி, நாக பஞ்சமி, சதி சாவித்ரி, தக்ஷாயணம், தாலி பாக்கியம் படங்களை தயாரித்தார். ஏராளமான தெலுங்கு படங்களையும் தயாரித்தார்.
திரைப்படத் தயாரிப்பால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்த கண்ணாம்பா கடைசி காலத்தில் பொருளாதாரத்திற்கு சிரமமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தார்.