நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

பழம்பெரும் நடிகை கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷ்ணம், இவர் நாடக ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கண்ணாம்பா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதாவது இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இல்லறத்தில் இணைந்தனர்.
பின்னாளில் கண்ணாம்பா நடிகையாக உயர்ந்தார். நாகபூஷ்ணம் இயக்குனர் ஆனார். கணவரின் படங்களை தயாரிப்பதற்காக ஸ்ரீராஜேஷ்வரி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கணவர் இயக்கிய படங்களை தயாரித்தார் கண்ணாம்பா.
தமிழில் ஹரிச்சந்த்ரா, துளசி ஜலந்தர், நவஜீவனம், சவுதாமினி, ஏழை உழவன், லட்சுமி, நாக பஞ்சமி, சதி சாவித்ரி, தக்ஷாயணம், தாலி பாக்கியம் படங்களை தயாரித்தார். ஏராளமான தெலுங்கு படங்களையும் தயாரித்தார்.
திரைப்படத் தயாரிப்பால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்த கண்ணாம்பா கடைசி காலத்தில் பொருளாதாரத்திற்கு சிரமமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தார்.