கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
பழம்பெரும் நடிகை கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷ்ணம், இவர் நாடக ஒருங்கிணைப்பாளராக இருந்தார். கண்ணாம்பா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதாவது இருவரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பாகவே இல்லறத்தில் இணைந்தனர்.
பின்னாளில் கண்ணாம்பா நடிகையாக உயர்ந்தார். நாகபூஷ்ணம் இயக்குனர் ஆனார். கணவரின் படங்களை தயாரிப்பதற்காக ஸ்ரீராஜேஷ்வரி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கணவர் இயக்கிய படங்களை தயாரித்தார் கண்ணாம்பா.
தமிழில் ஹரிச்சந்த்ரா, துளசி ஜலந்தர், நவஜீவனம், சவுதாமினி, ஏழை உழவன், லட்சுமி, நாக பஞ்சமி, சதி சாவித்ரி, தக்ஷாயணம், தாலி பாக்கியம் படங்களை தயாரித்தார். ஏராளமான தெலுங்கு படங்களையும் தயாரித்தார்.
திரைப்படத் தயாரிப்பால் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்த கண்ணாம்பா கடைசி காலத்தில் பொருளாதாரத்திற்கு சிரமமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தார்.