Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: கண்ணாம்பாவிற்கு பிறகு வசனத்தால் புகழ்பெற்ற சுஜாதா

25 ஜூன், 2025 - 02:53 IST
எழுத்தின் அளவு:
Flashback-Sujatha,-famous-for-her-dialogues-after-Kannamba
Advertisement

பிற மொழிகளில் வெளியாகும் நல்ல படங்களின் உரிமத்தை வாங்கி அதை தமிழில் தயாரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் கே.பாலஜி. அப்படி அவர் தயாரித்த படங்களில் ஒன்றுதான் 'விதி'. 'நியாயம் காவாலி' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் இது. முதலில் இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய கோதண்டராம ரெட்டியைத்தான் பாலாஜி இயக்கச் சொன்னார். 'இந்த படத்தின் உயிர்நாடியே வசனம்தான். தமிழ் எனக்கு சரியாக தெரியாது, அதனால் என்னால் தமிழில் இயக்க இயலாது' என்று கூறிவிட்டார். அதன்பிறகுதான் கே.விஜயன் இயக்கினார்.

ஒரு பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு விலகி ஓடிய காதலனை எதிர்த்து ஒரு பெண் சட்டப்போராட்டம் நடத்துவதுதான் படத்தின் கதை. இந்த சட்டப்போராட்டதில் வழக்கறிஞர் கேரக்டர்தான் முக்கியமானது. அந்த கேரக்டரில் சுஜாதா நடித்தார், காதலன் கேரக்டரில் மோகனும், காதலி கேரக்டரில் பூர்ணிமாவும் நடித்தார்கள்.

இந்த படத்தில் 40 சதவிகிதம் கோர்ட் காட்சிகள்தான், அதற்கு வசனம் எழுத அப்போது தகுதியான வசனகர்த்தாக்கள் இல்லை. அன்றைய படங்களில் கோர்ட் வசனங்கள் தூய தமிழில் பேசப்பட்டதால் அதை எழுத தகுதியான நபராக ஆரூர்தாஸ் கண்டறியப்பட்டு அழைத்து வரப்பட்டார். 17 வருடங்களாக சினிமா வாய்ப்பு இல்லாத அவர் இந்த படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

முதலில் படத்தில் ஆர்வமாக நடிக்க ஆரம்பித்த சுஜாதா கோர்ட் காட்சிகளையும் பக்க பக்கமான வசனங்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார், வசனங்களை மனப்பாடம் செய்ய முடியாமல் திணறினார். அதீத பயிற்சி காரணமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இந்த தகவல் ஆரூர்தாசிற்கு தெரிய வந்ததும் சுஜாதாவை சந்தித்த தாஸ் அவரை அருகில் வைத்துக் கொண்டு கடினமான வசனங்களை எளிமையாக்கினார். எப்படி பேச வேண்டும், எப்படி மனப்பாடம் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். அதன்பிறகு ஆரூர்தாசின் காலை தொட்டு வணங்கி மறுநாளில் இருந்து கோர்ட் காட்சிகளில் பிச்சு உதறினார்.

கடைசிநாள் படப்பிடிப்பில் கதைப்படி சுஜாதா வசனம் பேசியபடியே மயங்கி விழ வேண்டும், ஆனால் பேசி முடித்த பிறகு இயக்குனர் கட் சொன்ன பிறகும் சுஜாதா எழுந்திருக்கவில்லை. பின்னர்தான் அவர் நிஜமாகவே மயங்கி விழுந்தது தெரிந்தது.

அவரது கடின உழைப்புக்கு பெரிய வெற்றி கிடைத்தது. படம் வெள்ளி விழா கொண்டாடியது. படத்தின் திரைக்கதை வசனம் கூட ஒலிப்பதிவு தட்டுகளாக வெளிவந்தது. மீண்டும் ஒரு கண்ணாம்பாள் என்று மீடியாக்கள் பாராட்டியது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : தலைப்பை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்பிளாஷ்பேக் : தலைப்பை பார்த்து ... உடன் நடித்த குழந்தைகளின் அம்மாக்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா உடன் நடித்த குழந்தைகளின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in