முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
ஒரு படத்தின் தலைப்பை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு அதை உடனே நீக்குமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கான கடிதமும் எழுதிய நிகழ்வு ஒன்று நடந்தது.
அந்தக் காலத்தில் திகில், திரில்லர் படங்களை தந்து கொண்டிருந்த வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கி நடித்த படம் 'கைதி'. இந்த படத்தில் அவருடன் எஸ்.ஏ.நடராஜன், ரேவதி, மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அமெரிக்க படமான 'டார்க் பேஜஸ்' என்ற படத்தின் கதையை தழுவி இது எடுக்கப்பட்டது. செய்யாதா குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் நாயகன், சிறையில் இருந்து தப்பி உண்மையான குற்றவாளியை கண்டுபிடிப்பதுதான் கதை.
இந்த படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனம் எந்த படத்தை தயாரித்தாலும் படத்தின் டைட்டிலுக்கு முன்னால் 'ஜூபிடர் பிலிம்சின்..' என்ற வாக்கியத்தை சேர்த்துக் கொள்ளும், இந்த படத்தையும் 'ஜூபிடர் பிலிம்சின் கைதி' என்றே விளம்பரம் செய்தது.
ஆனால் இந்த படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு 'ரத்தம்'. இதனால் படத்தின் துவக்க நாளன்று 'ஜூபிடர் பிலிம்சின் ரத்தம் விரைவில் வருகிறது'. என்ற வாக்கியத்துடன் பத்திரிகைகளில் போஸ்டர்களில், சுவர்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். 'என்னது ஜூபிடர் பிலிம்ஸின் ரத்தமா? ஏன் என்னாச்சு அந்த நிறுவனத்திற்கு?' என்றே புரிந்து கொண்டனர். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு படத்தின் தலைப்பை மாற்றுமாறு கடிதங்கள் குவிந்தன.
'ஜூபிடர் பிலிம்சின் ரத்தம் விரைவில் வருகிறது' என்பதை மக்கள் வேறு மாதிரியாக புரிந்து கொண்டார்கள் என்பதை அறிந்த தயாரிப்பு நிறுவனம் உடனடியாக படத்தின் தலைப்பை 'கைதி' என்று மாற்றியது. அடுத்த சில நாட்களில் மறு விளம்பரம் செய்தது. படமும் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.