நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

கண்ணாம்பா என்றாலே தூய தமிழ் வசனங்களும், அவரது அம்மா கேரக்டருமே நினைவுக்கு வரும். ஆனால் அவர் கதை நாயகியாகவே ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதுவும் ஒரு சரித்திர கதை படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தார். அந்தப் படம் 'பெண்ணரசி'.
இந்த படத்தில் கண்ணாம்பா ஒரு நாட்டின் ராணியாக நடித்தார். ராணியை சதி செய்து கவிழ்த்து நாட்டை பிடிக்க நினைக்கும் ஒரு கூட்டத்திடமிருந்து அவர் நாட்டை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் கண்ணாம்பாவுக்கு வாள் சண்டையெல்லாம் இருந்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது பிரபல இயக்குனர் ஏ.பி.நாகராஜன். இவர்களுடன் கே.சூர்யகலா, பி.எஸ்.வீரப்பா, பி.ஆர்.சுலோச்சனா, எம்.என்.நம்பியார், ஈ.வி. சரோஜா, ஈ.ஆர்.சகாதேவன், வி.எம்.ஏழுமலை, சி.டி.ராஜகாந்தம், ஏ.கருணாநிதி, ஓ.ஏ.கே. தேவர், எம்.ஏ.கணபதி, ஆர்.பக்கிரிசாமி, பி.கனகா, எஸ்.எம்.திருப்பதிசாமி மற்றும் எம்.கே.விஜயா ஆகியோர் நடித்தனர்.
கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். 'சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன்பஸ், பணம் பந்தியிலே, முதலாளி' படங்களை தயாரித்த எம்.ஏ.வேணு தயாரித்து இருந்தார். கே.சோமு இயக்கி இருந்தார். படமும் நல்ல வரவேற்பை பெற்றது.