ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

திரைப்படங்களில் பகுத்தறிவு பேசுவார், அரசியலில் திராவிட கொள்கை ஏற்பார். ஆனால் அடிப்படையில் விஜயகாந்த் பெரிய பக்திமான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பக்தி திரைப்படங்களில் ஆர்வமுடன் நடித்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது 'வேலுண்டு வினையில்லை'.
ஒரு காலத்தில் பக்தி படங்களால் மக்களை வசியம் செய்த கே.சங்கர் சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கிய படம் இது. இதில் விஜயகாந்துடன் அம்பிகா, நம்பியார், ஜெய் கணேஷ், செந்தில், டெல்லி கணேஷ், வடிவுக்கரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். நம்பியாரின் குடும்பம் ஒரு தீவிர முருக பக்த குடும்பம். அவர்கள் முருகன் வேலை வீட்டில் வைத்து பரம்பரை பரம்பரையாக வணங்கி வருவார்கள். தங்கத்தினாலான அந்த வேல் அன்றைய மதிப்புபடி ஒரு கோடி ரூபாய்.
அதனை வில்லன் ஜெய் கணேஷ் திருடி வெளிநாட்டினருக்கு விற்க முயற்சிப்பார். காணாமல் போன வேலை தேடி போலீஸ் அதிகாரியான விஜயகாந்த் வருவார். அவர் முருக பக்தர் வேடம் அணிந்து கோவிலில் தங்கியிருந்து திருட்டுப்போன வேலை தேடுவார். அந்த வேல் கிடைத்ததா? என்பதுதான் படத்தின் கதை. பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற படம்.




