ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் |

கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன் போன்ற ஹிட் படங்களை இயக்கிய, ஆர்.வி.உதயகுமார் இப்போது தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக இருக்கிறார். தொடரி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தவர், இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். வினோத் இயக்கும் ரெட் லேபிள் படத்திலும் , ஹீரோயின் அப்பாவாக நடித்து இருக்கிறார்.
சென்னையில் நடந்த இந்த படவிழாவில் அவர் பேசுகையில், ‛‛நான் பல படங்களை இயக்குனர் என்றாலும், நடிக்கும்போது எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன். இயக்குனர் சொல்வதைதான் கேட்பேன். நான் கோவையை சேர்ந்தவன். அந்த ஊர்க்காரர்கள் எனக்கு பட வாய்ப்புகளை கொடுக்கவில்லை. மற்ற மாவட்டத்துக்காரர்கள் கொடுக்கிறார்கள் என்று ஜாலியாக குறிப்பிட்டார். அதேபோல் கடந்த 10, 15 ஆண்டுகளாக தமிழில் மிக சிறந்த படங்கள் அதிகம் வருவது இல்லை. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படங்கள் வரவில்லை. ஒரு சாராருக்கு பிடித்த படங்களே அதிகம் வருகின்றன். சினிமாவை பொறுத்தவரையில் இயக்குனர் தான் கேப்டன். அவர்களை யாரும் தவறாக பேசக்கூடாது. அவர்களுக்கு இழுக்கு வரும்படி நடந்து கொள்ளக்கூடாது'' என்றார்.




