பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

போயபதி சீனு இயக்கத்தில், பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியாக வேண்டிய தெலுங்குத் திரைப்படம் 'அகண்டா 2'. ஈராஸ் நிறுவனத்திற்கு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தர வேண்டிய பழைய கடன் தொகை பாக்கிக்காக சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. அதனால், படத்தை அறிவித்தபடி நேற்று வெளியிடமுடியவில்லை.
இந்நிலையில் படத்தைத் தள்ளி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது. அது குறித்து அவர்களது எக்ஸ் தளத்தில், “நாங்கள் 'அகண்டா 2' படத்தை பெரிய திரைகளுக்குக் கொண்டு வர எங்கள் முழு முயற்சியையும் செய்தோம், ஆனால் எங்கள் அயராத முயற்சிகள் இருந்தபோதிலும், சில சமயங்களில், மிகவும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கின்றன, மற்றும் துரதிர்ஷ்டவசமாக, இது அந்த நேரமாக அமைந்தது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மற்றும் சினிமா பிரியர்களுக்கும், படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலுடன் காத்திருந்தவர்களுக்கும், நாங்கள் மனமார்ந்த மன்னிப்பு கோருகிறோம். இந்த சவாலான தருணத்தில் எங்களுடன் நின்ற எங்கள் அன்பான 'மக்களின் கடவுள்' பாலகிருஷ்ணா காரு மற்றும் போயபாடி சீனு காரு ஆகியோருக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
அகண்டா 2, எப்போது வந்தாலும் இலக்கைத் தாக்கும்… புதிய தேதியுடன் விரைவில் வருகிறது” என்று அறிவித்துள்ளார்கள்.