சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

சக்தி பீடம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் "புத்தம் புது நேரம்". கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பரத்வாஜ், சதீஷ் குமார் நாயகர்களாக நடிக்கிறார்கள், சுபஸ்ரீ, ரசியா நாயகியாக நடிக்கிறார்கள்.
படத்தின் அறிமுக விழாவில் நாயகி சுபஸ்ரீ பேசும்போது "விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கிறது. எல்லோரும் முடிந்த அளவு பணத்தை போட்டு எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து எடுத்திருக்கிறோம். இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் சந்திரகுமார் சாரின் படம் தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கையின் காட்பாதர். எனக்கு மட்டுமல்ல எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகும் புதுமுக நடிகைகளுக்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர்தான் காட்பாதர்" என்றார்.
இன்னொரு நாயகியான ரசியா பேசும்போது, " நான் மாலத்தீவில் இருந்து நடிக்க வந்திருக்கிறேன். எங்கள் பகுதியில் இருந்து தமிழுக்கு வரும் முதல் நடிகை தான்தான் என்று நினைக்கிறேன். பள்ளி காலத்தில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் இருந்தது. இதற்காக நடனம், நடிப்பு கற்று இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க விரும்புகிறேன்" என்றார்.




