அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

சக்தி பீடம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் "புத்தம் புது நேரம்". கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பரத்வாஜ், சதீஷ் குமார் நாயகர்களாக நடிக்கிறார்கள், சுபஸ்ரீ, ரசியா நாயகியாக நடிக்கிறார்கள்.
படத்தின் அறிமுக விழாவில் நாயகி சுபஸ்ரீ பேசும்போது "விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கிறது. எல்லோரும் முடிந்த அளவு பணத்தை போட்டு எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து எடுத்திருக்கிறோம். இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் சந்திரகுமார் சாரின் படம் தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கையின் காட்பாதர். எனக்கு மட்டுமல்ல எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகும் புதுமுக நடிகைகளுக்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர்தான் காட்பாதர்" என்றார்.
இன்னொரு நாயகியான ரசியா பேசும்போது, " நான் மாலத்தீவில் இருந்து நடிக்க வந்திருக்கிறேன். எங்கள் பகுதியில் இருந்து தமிழுக்கு வரும் முதல் நடிகை தான்தான் என்று நினைக்கிறேன். பள்ளி காலத்தில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் இருந்தது. இதற்காக நடனம், நடிப்பு கற்று இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க விரும்புகிறேன்" என்றார்.




