இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியல் மூலம் அறிமுகமானவர் மேக்னா வின்சென்ட். ஏற்கெனவே பல மலையாள சீரியல்களில் நடித்திருந்த அவர், 'தெய்வம் தந்த வீடு' தொடரின் மலையாள பதிப்பிலும் நடித்தார். அதை தொடர்ந்து 'பொன்மகள் வந்தாள்' சீரியலிலும் நடித்தார். 'கயல்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார்.
பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் கேரளாவிற்கே திரும்பி சென்று விட்டார். தற்போது அவர் மலையாள சீரியல்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும், தற்போது இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சீரியலை விட விவசாயம் அதிக லாபம் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: இப்போது சொந்த ஊரில் இருக்கிறேன். அவ்வப்போது நடித்துக் கொண்டிருந்தாலும், இயற்கை விவசாயத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். வீட்டுக்குத் தேவையான காய்கறிகளுக்காகத்தான் இதை தொடங்கினேன். கொஞ்சம் பணம் சேர்ந்ததும், எங்க ஊர்லயே ஒரு ஆறு இருக்கு. அந்த ஆற்றின் கரையில் கொஞ்சம் நிலம் வாங்கி 'மேக்னாஸ் பார்ம்'னு தனி பண்ணையே தொடங்கி விட்டேன்.
காய்கறிகள், பழங்கள், கீரை பயிரிடுவதோடு கால்நடைகளும் வளர்க்கிறோம். இப்போது மீன் பண்ணையும் உருவாக்கி இருக்கிறேன். என்கிறார் மேக்னா.