கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

கமல்ஹாசன் தயாரிக்க, ரஜினிகாந்த் நடிக்க, சுந்தர் சி இயக்கப் போவதாக ரஜினியின் 173வது பட அறிவிப்பை சில மகிழ்ச்சியான புகைப்படங்களுடன் கடந்த வருடம் நவம்பர் 5ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, அடுத்த ஒரு வாரத்தில் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் சுந்தர் சி.
அதன்பின் அப்படத்திற்காக சில இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. கடந்த சில வருடங்களில் குறிப்பிடும்படியான படங்களைக் கொடுத்த இயக்குனர்கள் அவர்கள். 'பார்க்கிங்' பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், 'டிராகன்' பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, 'மகாராஜா' பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் ஆகியோர் ரஜினிக்காக கதை எழுதினார்கள். அவர்கள் சொல்லிய கதைகளில் அஷ்வத் மாரிமுத்துவின் கதையை ரஜினி தேர்வு செய்துள்ளார் என்று சொல்கிறார்கள்.
தை மாதத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகி சித்திரை மாதத்தில் படப்பிடிப்பு துவங்கலாம் என்று தெரிகிறது. ஏற்கெனவே ரஜினி 173 குறித்து அறிவிப்பு வெளியிட்டு இயக்குனர் விலகியதால், இந்த முறை அனைத்தையும் உறுதி செய்த பிறகே அறிவிப்பை வெளியிட உள்ளார்களாம்.
அறிவிப்பு வெளியிட்டாலும், படப்பிடிப்பு ஆரம்பமானாலும், படப்பிடிப்பு முடியும் வரை சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ரஜினி, கமல்ஹாசன் கூட்டணியில் அறிவிப்பு வெளியிட்டு, அது குழப்பத்தில் முடிந்ததை தவிர்த்திருக்கலாம் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.




