2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் ஒரு இயக்குனராகவும் மாறி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் தெலுங்கில் சலார் படத்திலும் ஹிந்தியில் படே மியான் சோட்டே மியான் படத்திலும் வில்லனாக நடித்தார் பிரித்விராஜ். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் தயாராகி வரும் தார்யா என்கிற படத்தில் கதாநாயகனாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் கதாநாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். ராசி, தல்வார், சாம் பகதூர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மேக்னா குல்சார் இயக்குகிறார். ஜங்கில் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் பிரித்விராஜ், “இத்தனை நாட்கள் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் வாழ்ந்து வந்த ஒரு கதை, விரைவில் ரசிகர்களுக்காக திரையில் வர இருக்கிறது/. 2026 திரையரங்குகளில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.