பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

மலையாள திரை உலகில் மறைந்த நடிகர் சுகுமாரனின் மனைவியும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் தனது மகன்கள் பிரித்விராஜ் மற்றும் இந்திரஜித் இருவரும் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வருவதை சந்தோஷத்துடன் கவனித்து வருகிறார். இளைய மகன் பிரித்விராஜ் மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் நடிக்க துவங்கி டைரக்ஷன், நடிப்பு என பிசியாக இருக்கிறார். அதேசமயம் மூத்த மகன் இந்திரஜித் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் சர்வம், என் மன வானில் உள்ளிட்ட இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை மல்லிகா சுகுமாரன் அளித்த ஒரு பேட்டியில், “எனது மூத்த மகன் இந்திரஜித் விரைவில் டைரக்ஷனில் இறங்கப் போகிறார், அதற்கான கதையும் தயாராகி விட்டது. தற்போது ஹிந்தியில் அனுராக் காஷ்யப்புடன் ஒரு படம் மற்றும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி டைரக்ஷனில் ஹிந்தியில் இன்னொரு படம் மற்றும் மலையாளத்தில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இவற்றை முடித்துவிட்டு அடுத்ததாக டைரக்ஷனிலும் இறங்க இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
தம்பியை போல அண்ணனும் டைரக்ஷனில் சாதிப்பார் என எதிர்பார்க்கலாம்.