தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக பயணித்து வருபவர் உபேந்திரா. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் நண்பராக காளீசன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளார். இவரது மனைவி பிரியங்கா திரிவேதி. இவரும் நடிகை தான். தமிழில் அஜித்துடன் 'ராஜா' படத்தில் ஜோடியாக நடித்தவர். இந்த நிலையில் இவர்கள் இருவரது மொபைல் போன்களும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டன.
இந்த போன்களில் இருந்து அவர்களது நண்பர்கள் வட்டாரத்தில் உள்ள சிலருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று பணம் கேட்டு மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விஷயம் ஒரு சில நண்பர்கள் மூலமாக உபேந்திரா மற்றும் பிரியங்கா இருவருக்குமே தெரிய வந்தது. உடனடியாக இருவருமே தங்களது சோசியல் மீடியாவில் தனித்தனி வீடியோக்களை வெளியிட்டு ''எங்களது மொபைல் போன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதனால் அதிலிருந்து பணம் கேட்டு வரும் மெசேஜ் நாங்கள் அனுப்பியது இல்லை. தயவு செய்து அதை புறக்கணியுங்கள். எங்கள் போன்கள் மீட்கப்பட்டதும் நாங்களே தகவல் தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.