இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரேயா. ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரே கோஷீவ் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இருப்பினும் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரது பெயரை பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் மோசடி நடந்து வருவதாக ஸ்ரேயாவின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து அவர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த முட்டாள் யார். இந்த நபர் என்னை போல என்னுடன் பணி செய்ய விரும்பும் நபர்களிடம் பேசுகிறார். இப்படி போலியாக குறுஞ்செய்தி அனுப்பி நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள். மக்களின் நேரம் வீணடிக்கப்படுவது வருத்தமளிக்கிறது. இந்தச் சம்பவம் துரதிஷ்டவசமானது. இது நான் அல்ல, அது எனது எண் அல்ல'' என குறிப்பிட்டுள்ளார்.