நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

இந்தியத் திரையுலகத்தில் 2025ம் ஆண்டில் 1000 கோடி படங்களே வரவில்லை என்று இருந்த ஏக்கத்தை கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் வெளிவந்த ஹிந்திப் படமான 'துரந்தர்' தீர்த்து வைத்தது.
இந்திய அளவில் இதுவரையில் வெளியான படங்களில், இப்படம் தற்போது அதிக வசூலைக் குவித்த படங்களில் நம்பர் 1 என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு 830 கோடிகளுடன் 'புஷ்பா 2' படம் முதலிடத்தில் இருந்தது. தியேட்டர்களில் மொத்தமாக ஓடிய நாட்களில் பெற்ற வசூல் அது. அதை 33 நாட்களில் முறியடித்துள்ளது 'துரந்தர்'.
இன்னும் 'துரந்தர்' படம் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், அந்த வசூல் தொகை இன்னும் அதிகரிக்கலாம். உலக அளவில் மொத்தமாக 1300 கோடியை நோக்கி அதன் வசூல போய்க் கொண்டிருக்கிறது. இதனால், அடுத்து 'துரந்தர் 2' படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.