தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ என்ற படத்தில் அறிமுகமான மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அதையடுத்து ரவி மோகனுடன் ஜீனி என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்தாண்டில் மலையாளத்தில் இவர் நடித்து வெளியான லோகா சாப்டர் 1 என்ற படம் 300 கோடி வசூல் செய்தது. அந்த வகையில் மோகன்லாலின் வசூல் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார் கல்யாணி பிரியதர்ஷன். தற்போது தமிழில் மார்ஷல் என்ற படத்தில் கமிட்டாகியுள்ள கல்யாணி பிரியதர்க்ஷன் அடுத்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.
துரந்தர் படத்தை அடுத்து ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிக்கும் ஜாம்பி தொடர்பான படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். ஜெய்வேதா என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிப்பதற்கு ஆலியா பட்டிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படத்தை தென்னிந்திய ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக கல்யாணி பிரியதர்ஷனை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.




