கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
இயக்குனர் ஷங்கர், ராம் சரண் இணையும் முதல் படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக சிரஞ்சீவி, இயக்குனர் ராஜமவுலி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
ஆர்சி 15 என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்க உள்ளதாக சொல்லி உள்ளார்கள். 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரண் நடித்து முடித்துள்ளார். இப்படம் வெளிவந்த பிறகு ராம் சரணின் மார்க்கெட் நிலவரம் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையும் கருத்தில் கொண்டு தான் ஷங்கர், ராம் சரண் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடிவெடுத்துள்ளார்களாம்.
ஏஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரை மட்டுமே தனது படங்களுக்கு இசையமைப்பாளராகப் பயன்படுத்தி வந்த ஷங்கர், 'பாய்ஸ்' படத்தில் அவர் நடிகராக அறிமுகப்படுத்திய தமனை இந்தப் படத்தில் இசையமைப்பாளராக நியமித்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் தமன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் அடுத்து இயக்க உள்ள 'அந்நியன்' ஹிந்தி ரீமேக்கின் கதாநாயகன் ரன்வீர் சிங் இந்தப் படபூஜையில் கலந்து கொண்டதில் ஆச்சரியமில்லை. சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் படம் என்பதாலும், தனது அபிமான இயக்குனர் ஷங்கர் என ராஜமவுலி ஏற்கெனவே சொன்னதாலும் அன்புக்காகக் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.