ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய விமர்சனம், 'பெத்தி' இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? |

இயக்குனர் ஷங்கர், ராம் சரண் இணையும் முதல் படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இந்த பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக சிரஞ்சீவி, இயக்குனர் ராஜமவுலி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
ஆர்சி 15 என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாக்க உள்ளதாக சொல்லி உள்ளார்கள். 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம் சரண் நடித்து முடித்துள்ளார். இப்படம் வெளிவந்த பிறகு ராம் சரணின் மார்க்கெட் நிலவரம் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையும் கருத்தில் கொண்டு தான் ஷங்கர், ராம் சரண் படத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடிவெடுத்துள்ளார்களாம்.
ஏஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரை மட்டுமே தனது படங்களுக்கு இசையமைப்பாளராகப் பயன்படுத்தி வந்த ஷங்கர், 'பாய்ஸ்' படத்தில் அவர் நடிகராக அறிமுகப்படுத்திய தமனை இந்தப் படத்தில் இசையமைப்பாளராக நியமித்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் தமன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் அடுத்து இயக்க உள்ள 'அந்நியன்' ஹிந்தி ரீமேக்கின் கதாநாயகன் ரன்வீர் சிங் இந்தப் படபூஜையில் கலந்து கொண்டதில் ஆச்சரியமில்லை. சிரஞ்சீவி, அவரது மகன் ராம்சரண் படம் என்பதாலும், தனது அபிமான இயக்குனர் ஷங்கர் என ராஜமவுலி ஏற்கெனவே சொன்னதாலும் அன்புக்காகக் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.