மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கும் பிரமாண்ட படம் 'வாரணாசி'. மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் மற்றும் பஸ்ட் லுக் வெளியீட்டு விழா ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடந்தது. இதுவரை நடந்த சினிமா விழாக்களிலேயே இதுவே பிரமாண்ட விழா என்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே 27 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மேடையில் அமைக்கப்பட்ட எல்இடி தொழில்நுட்ப பின்னணிக்காக மட்டுமே ரூ. 8 கோடி செலவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்காக மட்டும் ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த செலவு விபரம் இப்போது சினிமா வட்டாரத்தில் விவாத பொருளாகி உள்ளது.




