வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் லட்சியப் படமான 'வாரணாசி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ராஜமவுலி அளித்துள்ள ஒரு பேட்டியில், இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்துவிட்டது என்றும், இந்த படத்தின் ராமாயண அத்தியாயம் உட்பட 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 50 சதவீத படப்பிடிப்பை வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியிருக்கிறார்.
அதோடு படப்பிடிப்பு முடிந்ததும் இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்படுகிறது. முக்கியமாக விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் நடைபெற உள்ளது என்று கூறியுள்ள ராஜமவுலி, இந்த படம் 'ஆர்ஆர்ஆர்' படத்தை போன்று 'நாட்டு நாட்டு' என உற்சாகமான பாடல்களை கொண்டிருக்காது. இந்த வாரணாசி வேறு மாதிரியான படம் என்றும் தெரிவித்திருக்கும் அவர், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகியோர் நடிக்கும் இந்த படம் 3 மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.




