சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

தமிழ் எழுத்துலகில் புகழ்பெற்ற கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ் குமார். இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. இவரே சில படங்களுக்கு, கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.
முதன் முறையாக இவரது கிரைம் நாவலை தழுவி 'ரேகை' என்ற வெப் தொடர் தயாராகி உள்ளது. தினகரன் எம். உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த வெப் தொடரில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ். குரூப் புரொடக்ஷன் சார்பில் எஸ். சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.
தொடர் குறித்து இயக்குனர் தினகரன் எம். கூறும்போது "நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறையைக் குறித்து இந்தத் தொடர் பேசுகிறது. போலீஸ் புகாராக கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச் சிதைக்கிறது. அது என்ன என்பதுதான் தொடரின் கதை" என்றார்.
இந்த தொடர் வருகிற 28ம் தேதி முதல் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.




