பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தமிழ் எழுத்துலகில் புகழ்பெற்ற கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ் குமார். இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாகி உள்ளது. இவரே சில படங்களுக்கு, கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.
முதன் முறையாக இவரது கிரைம் நாவலை தழுவி 'ரேகை' என்ற வெப் தொடர் தயாராகி உள்ளது. தினகரன் எம். உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த வெப் தொடரில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ். குரூப் புரொடக்ஷன் சார்பில் எஸ். சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.
தொடர் குறித்து இயக்குனர் தினகரன் எம். கூறும்போது "நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறையைக் குறித்து இந்தத் தொடர் பேசுகிறது. போலீஸ் புகாராக கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச் சிதைக்கிறது. அது என்ன என்பதுதான் தொடரின் கதை" என்றார்.
இந்த தொடர் வருகிற 28ம் தேதி முதல் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.