ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
அந்தக்கால காமெடி நடிகர்களில் ஒருவர் டி.எஸ்.துரைராஜ். பாய்ஸ் நாடக குழுவில் இருந்த அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் பிரபலமான நடிகராக முடியவில்லை. என்றாலும் திருநீல கண்டர், சகுந்தலை படங்களில் இவரது காமெடி நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.
ஒரு கட்டத்தில் 'மரகதா பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் ஏமாற்றம் தந்ததால் கடும் பொருளாதார சிக்கலில் மாட்டினார். இறுதியாக தானே ஒரு படத்தை தயாரித்து இயக்கினார். அதுதான் 'பானை பிடித்தவன் பாக்கியசாலி'.
இந்த படத்தில் சோலோ ஹீரோயினாக சாவித்ரி நடித்தார். அவருடன் டி.எஸ்.துரைராஜ், கே.பாலாஜி, ஆர்.நாகேஸ்வரராவ், டி.பி.முத்துலட்சுமி, வி.எஸ்.ராகவன், அங்கமுத்து உள்பட பலர் நடித்திருந்தார்கள். கமல்கோஷ் என்கிற வங்க மொழி ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்திருந்தார். 1958ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. டி.எஸ்.துரைராஜ் தனது பொருளாதார சிக்கலை தீர்த்தார்.