ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

சமீபகாலமாக இளையராஜா இசையில் உருவான பாடல்களை மற்ற இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைக்கும் படங்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபா தாரேன் போன்ற பாடல்கள் இடம் பெற்றன. தனது இசையில் உருவான பாடல்களை அனுமதியின்றி மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து பாடலை பயன்படுத்த இடைக்கால தடை போட்டார்கள்.
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் ஒரு மனு தாக்கல் செய்தார்கள். இந்நிலையில் இன்று அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தள்ளுபடி செய்துவிட்டது. அதோடு, தன்னுடைய பாடல்களை மற்றவர்கள் பயன்படுத்தினால் அதை தடுப்பதற்கும், பாடலை ரீமிக்ஸ் செய்வதை தடுக்கவும் இளையராஜாவுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி, இடைக்காலத்தடையை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.
இதேபோல் இளையராஜா இசையில் உருவான கருத்த மச்சான் பாடல் டியூட் படத்தில் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தப் பட்டதற்கும் சமீபத்தில் நீதிமன்றம் தடை போட்டது குறிப்பிடத்தக்கது.