பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' | மெமரி கார்டு விவகாரத்தை விசாரணை மூலம் முடிவுக்கு கொண்டு வந்த ஸ்வேதா மேனன் | 'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | அமிதாப்பச்சன் வீட்டில் தங்க கழிப்பறையா : பரபரப்பு கிளப்பிய பாலிவுட் நடிகர் | அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம் | ஊர்வசியின் சகோதரர் நடிகர் கமல் ராய் காலமானார் |

'மிடில் கிளாஸ் பேமிலியை' மையமாக கொண்ட படங்களில் இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கலாம், மினிமம் கியாரண்டி இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த 'மிடில் கிளாஸ், குடும்பஸ்தன், பார்க்கிங்' போன்ற படங்கள் அமைந்தன.
அந்தக் காலத்திலும் மிடில் கிளாஸ் பேமிலி படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. அதில் முக்கியமானது 'முதல் தேதி' என்கிற படம். இந்த படம் 'பஹலி தாரிக்' என்ற ஹிந்திப் படத்தின் ரீமேக். இதனை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ப.நீலகண்டன் இயக்கினார்.
தமிழ் பதிப்பில் சிவாஜி கணேசன், அஞ்சலிதேவி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், 'குலதெய்வம்' ராஜகோபால், 'ஜெயக்கொடி' கே.நடராஜன், கே.டி. சந்தானம், ஆர்.பாலசுப்ரமணியம், முஸ்தபா, சி.வி.வி. பந்துலு, 'யதார்த்தம்' பொன்னுசாமி பிள்ளை, தசரதன், டி.ஆர். நடராஜன், வி.கே. ஆச்சாரி குண்டுமணி, குமாரி சுசீலா, பேபி உமா, சாரதாம்பாள் கிருஷ்ணவேணி ஆகியோர் நடித்தனர்.
சிவாஜி நடுத்தர வர்க்க குடும்பஸ்தன். குறைந்த சம்பளத்தில் வங்கி ஒன்றில் பணியாற்றி வருவார். அவரது மனைவி அஞ்சலி தேவி, நண்பன் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.
ஒரு நாள் சிவாஜி பணியாற்றிய வங்கி, திவாலாகி விடும். இதனால் வேலை இழக்கும் சிவாஜி குடும்பத்தை நடத்த கஷ்டப்படுவார். இதனால் அவர் தற்கொலை செய்து கொள்வார். அவரது ஆவி எமதர்மராஜன் முன் நிற்கும். இன்னும் ஆயுள் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சிவாஜியை பார்த்து சினம் கொள்ளும் எமன் "மீண்டும் பூமிக்கு சென்று நீ தற்கொலை செய்து கொண்டதால் என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்த்து வா" என்று அனுப்பி வைப்பார்.
சிவாஜி பூமிக்கு வருவார், குடும்பம் வறுமையில் தவிக்கும், மகள் சிலரால் பலாத்காரம் செய்யப்படுவாள், மகன் திருடனாக மாறுவான், இப்படி பல விஷயங்கள் நடக்கும், சிவாஜி ஆவி என்பதால் அதை பார்க்கத்தான் முடியுமே தவிர அவரால் எதுவும் செய்ய முடியாது. தான் தற்கொலை செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று அவர் உணரும்போது சிவாஜி விழித்துக் கொள்வார். ஆம்... தற்கொலை எண்ணத்துடன் தூங்கச் சென்ற சிவாஜி கண்ட கனவுதான் படத்தின் திரைக்கதை.