Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது

10 மார், 2026 - 10:59 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-story-that-was-ignored-by-the-television-company-celebrated-its-silver-jubilee-in-cinema
Advertisement


ஏவிஎம் நிறுவனத்தில் ஏவிஎம் சரவணன் தயாரிப்பு நிர்வாகியாக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக 'மாமியார் மெச்சிய மருமகள்' என்ற படத்தை தயாரித்தார். அந்த படம் பெரிய தோல்வியை தழுவியது. இதனால் அடுத்த படத்தை வெள்ளி விழா படமாக எடுத்து ஜெயிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். இதற்காக நூற்றுக் கணக்கான கதைகள் கேட்டார். கங்கை அமரன் ஒரு கதை சொல்லி அது ஓகே செய்யப்பட்டது. ஆனால் அந்த படம் நல்லபடமாக வரும், ஆனால் வெள்ளி விழா வரைக்கும் வராது என்று கணித்த சரவணன், அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்.

ஒரு நாள் காலையில் பேப்பர் படிக்கும்போது சித்ராலயா கோபு எழுதிய 'பட்டம் பறக்கட்டும்' என்ற நாடகத்தை ஒரு முன்னணி தொலைக்காட்சி நிராகரித்த செய்தி இருந்தது. இதை படித்ததும் சித்ராலயா கோபுவை தன் அலுவலத்திற்கு அழைத்து கதை கேட்டார். 'லப் பக்' என்ற ஆங்கில படத்தை தழுவி அந்த நாடகம் எழுதப்பட்டிருந்தது. இந்த கதை வெள்ளி விழா கொண்டாடும் என்று நம்பினார். அதற்கு முதல் தேவை இதில் மனோரமா நடிக்க வேண்டும் என்று கருதினார். மனோரமாவே எதிர்பார்க்காத ஒரு பெரும் சம்பளத்தை அவருக்கு கொடுத்து ஒப்பந்தம் செய்தார். பாட்டி, பேரன் பாசக் கதை என்பதால் பேரனாக பாண்டியராஜனை ஒப்பந்தம் செய்தார்.

படத்தில் மனோரமாவுக்கு சண்டை காட்சி வைத்தார். அதோடு தானாகவே இரண்டாக பிரியும் ஒரு காரை வடிவமைத்து அந்த காரும் ஒரு கேரக்டராக படம் முழுக்க வலம் வந்தது. படம் வெளியான பிறகு தியேட்டர் தியேட்டராக வலம் வந்தது. 'பாட்டி சொல்லை தட்டாதே' படம் வெள்ளி விழா கொண்டாடியது. ஏவிஎம் நிறுவனத்தின் மைல்கல் படமானது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ்லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் ... பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் பாரதிராஜா உடல்நிலை எப்படி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap