ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு |
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜாவும் நகரி தொகுதியில் தோல்வி அடைந்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்தியதில் ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு தலைவர் பிரசாத் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11ம் தேதி புகார் மனு அனுப்பினார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டது.
தற்போது இந்த விசாரணை தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து ரோஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் ரோஜா கைதாகும் வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. முதல் கட்டமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ரோஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட இருப்பதாக தெரிகிறது.