பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர் சூரி கதாநாயகன் அவதாரம் எடுத்த பிறகு கதைக்கு முக்கியம் வாய்ந்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். தற்போது 'மண்டாடி' என்ற படத்தில் மீனவராக நடித்து வருகிறார் சூரி. இப்படம் மீனவர்கள் இடையே நடக்கும் படகு போட்டியை மையமாக கொண்ட கதையில் தயாராகிறது. இதுவரை சூரி நடித்த படங்களை விட இந்த படத்தின் பட்ஜெட் சற்று கூடுதலாகும்.
இந்த படத்திற்கு பின் ‛‛இன்று நேற்று நாளை, அயலான்' ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.