சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஏற்கனவே திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. அதில் சர்ச் ஒன்றில் மோகன்லால், மீனா உள்ளிட்ட குடும்பத்தினர் வழிபடுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன. படப்பிடிப்பை பார்ப்பதற்கு அந்த பகுதி மக்கள் திரளாக கூடினார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த லீலா மணியம்மா என்கிற 80 வயது மூதாட்டி மோகன்லாலின் தீவிர ரசிகை. மோகன்லாலின் தீவிர ரசிகையான லீலா மணியம்மா அவரது படம் ஒன்று கூட விடாமல் தியேட்டருக்கே சென்று பார்த்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
மோகன்லாலின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவர், உள்ளே செல்ல முடியாமல் வெகு நேரம் காத்துக் கிடந்தார். படக்குழுவினரிடம் மோகன்லாலை சந்தித்து விட்டு தான், நான் இங்கிருந்து கிளம்புவேன் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் படப்பிடிப்பு பிசியில் உரிய நேரத்தில் அந்த தகவல் அவருக்கு சொல்லப்படவில்லை. பின்னர் இந்த தகவலை கேள்விப்பட்ட மோகன்லால், மாலை 5 மணி அளவில் உடனடியாக அந்த மூதாட்டியை அழித்து வர செய்து நலம் விசாரித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.




