நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது மலையாளத் திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'டயஸ் இரே' திரைப்படம் 50 கோடியை தாண்டி வசூலித்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தற்போது மோகன்லாலின் மகள் விஸ்மாயாவும் திரையுலகில் ஒரு நடிகையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன '2018' என்கிற படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் தான், 'தொடக்கம்' என்கிற படம் மூலமாக விசுமையாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறார்.
இதன் துவக்க விழா பூஜை சமீபத்தில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இதனை தொடர்ந்து தனது தாய் சுசித்ராவுடன் சேர்ந்து கொல்லூர் மூகாம்பிகை தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்துள்ளார் விஸ்மாயா மோகன்லால். இந்த வருடம் மோகன்லாலுக்கு இரண்டு 200 கோடி வசூல் படங்களும் பிரணவுக்கு 50 கோடி வசூல் வெற்றி படமும் கிடைத்துள்ளதுடன் விஸ்மாயாகவும் நடிகையாக அறிமுகமாவதால் மோகன்லால் குடும்பமே உற்சாகத்தில் இருக்கிறது.