வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிரபலமான நடிகையான சென்னையைச் சேர்ந்த சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமொருவை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனித்தனியே அவர்களது முதல் திருமண உறவை விட்டுப் பிரிந்தவர்கள். 'பேமிலி மேன்' வெப்சீரிஸில் ஒன்றாகப் பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின் இருவரும் ஒன்றாக இருந்த சில புகைப்படங்கள் வெளியானாலும், தங்களது காதலைப் பற்றி வெளிப்படையாக சொல்லாமல் இருந்தார்கள்.
இவர்களது திருமணம் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சைகளும் கமெண்ட்டுகளும் வந்தன. சமந்தாவின் முதல் கணவரான நடிகர் நாக சைதன்யா, 'பொன்னியின் செல்வன்' பட நடிகை சோபிதா துலிபலாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த போது இப்படியான ஒரு சர்ச்சையும், கமெண்ட்டுகளும் எழவில்லை. ஆனால், சமந்தாவின் மறுமணம் நடந்த உடனேயே இப்படியான சர்ச்சை எழுவது குறிப்பிட வேண்டிய ஒன்று.
இதனிடையே, சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமொருவின் சகோதரி ஷீதல் நிடிமொரு, சமந்தாவை தங்கள் குடும்பத்தினருடன் வரவேற்றது குறித்து பதிவிட்டுள்ளார்.
“சிவனை சந்திரகுண்டத்தில் இன்று வழிபடும்போது…ஈரமாக, நடுங்கியபடி, பிரதோஷ காலத்தில், நான் சிவலிங்கத்தை கண்ணீருடன் நிறைந்த இதயத்துடன் அணைத்துக்கொண்டேன். வலியின் கண்ணீர்கள் அல்ல… ஆனால் நன்றியின் கண்ணீர்கள்.
இந்த தருணத்தில் நான் உணரும் அமைதிக்கான நன்றி, எங்கள் குடும்பத்தைச் சூழ்ந்திருக்கும் தெளிவுக்கான நன்றி, மற்றும் ராஜ் மற்றும் சமந்தாவின் பயணத்தில் உள்ள 'மென்மையான சீரமைப்பு' உணர்வுக்கான நன்றி.
ஒரு குடும்பமாக நாங்கள் அவர்கள் எப்படி முன்னேறி செல்கிறார்கள் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறோம்…அமைதியான கண்ணியம், நேர்மை, மற்றும் இரு இதயங்கள் திட்டமிட்டு ஒரே பாதையை தேர்ந்தெடுக்கும்போது வரும் உறுதியுடன்.
மேலும் ஒரு குடும்பமாக, நாங்கள் அவர்களுடன் முழுமையாக, மகிழ்ச்சியுடன், தயக்கமின்றி நிற்கிறோம், அவர்களை ஆசீர்வதித்து, எல்லா வழிகளிலும் ஆதரித்து.
இத்தகைய புனிதமான நாளில் இஷா சடங்குகளை குடும்பமாகச் சேர்ந்து செய்வது வாழ்க்கை தன்னை மிக அழகான வழியில் சீரமைத்துக்கொள்வது போல் உணர்ந்தது. சில உறவுகள் வெறுமனே நிகழ்வதில்லை என்பதை அது நினைவூட்டியது…
அவை அமைதியுடன் வருகின்றன.
நான் எள் எண்ணெய் விளக்குகளை ஏற்றும்போது என் இதயம் ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும் பிரார்த்தித்தது: ஒவ்வொருவரும் இத்தகைய அமைதியான, உறுதியான, மற்றும் சரியான அன்பை கண்டுபிடிக்கட்டும்,” எனப் பதிவிட்டுள்ளார்.




