ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

சென்னையில் பிறந்த வளர்ந்த சூர்யா, இப்போது குழந்தைகளின் படிப்பு, ஜோதிகா விருப்பத்துக்கு இணங்க மும்பையில் வசிக்கிறார். சென்னை தி.நகரில் பல கோடி மதிப்புள்ள பங்களா இருந்தாலும் அதில் அவர் அப்பா சிவகுமார், தம்பி கார்த்தி மட்டுமே வசிக்கிறார்கள். சூர்யா இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். அடுத்த ஆண்டு படம் ரிலீஸ். அடுத்து வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லுாரி படத்தில் நடித்து வருகிறார். லேட்டஸ்ட்டாக, பஹத் பாசில் நடித்த நடித்த ஆவேசம் என்ற மலையாள படத்தை இயக்கிய ஜீத்து மாதவன் படத்தில் நடிக்கிறார்.
சென்னையில் நேற்று பூஜை நடந்துள்ளது. அடுத்து ஹிந்தி பட இயக்குனருக்கு கால்ஷீட் கொடுக்கப் போகிறார். ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. மும்பையில் செட்டில் ஆன சூர்யா தமிழ் இயக்குனர்களை தவிர்த்து தெலுங்கு, மலையாள, ஹிந்தி இயக்குனர்களுக்கு கால்ஷீட் கொடுக்க காரணங்கள் இருக்கிறது. அவர் நடித்த சில தமிழ் படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக, கங்குவா படத்தில் கஷ்டப்பட்டு நடித்து இருந்தாலும், அதை ட்ரோல் செய்தார்கள். கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதனால் அந்த படத்தில் வெற்றியும், பல கோடி வசூலும் பாதிக்கப்பட்டது. அந்த ஆதங்கத்தில் சூர்யா மனநிலை இப்படி மாறியுள்ளது என்கிறார்கள்.
ஆனால், அவர் தரப்போ, வெங்கி அட்லுாரி, ஜீத்து மாதவனிடம் நல்ல கதை இருந்ததால் கால்ஷீட் கொடுத்துள்ளார். அவருக்கு பெரிய வெற்றி தேவைப்படுவதால், வெற்றி பெற்ற இயக்குனர்களிடம் இணைந்துள்ளார் என்கிறார்கள்.




