பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

இயக்குனர் சுந்தர்.சி தற்போது நடிகை நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2' என்ற படத்தை இயக்கி வருகிறார். ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு சுந்தர்.சி அடுத்து நடிகர் கார்த்தியுடன் இணைவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.
இப்போது இதே கதையில் சுந்தர்.சி மீண்டும் விஷாலை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இதன் மூலம் மீண்டும் மதகஜராஜா கூட்டணி இணைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்தில் தொடங்க சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
விஷால், சுந்தர் சி கூட்டணியில் உருவான ‛மதகஜராஜா' படம் 12 ஆண்டுகளுக்கு முன் உருவானது. பல்வேறு பிரச்னைகளால் முடங்கி இருந்த படம் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகி இந்தாண்டின் முதல் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.