பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

இயக்குனர் சுந்தர்.சி தற்போது நடிகை நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன் 2' என்ற படத்தை இயக்கி வருகிறார். ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படத்திற்கு பிறகு சுந்தர்.சி அடுத்து நடிகர் கார்த்தியுடன் இணைவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.
இப்போது இதே கதையில் சுந்தர்.சி மீண்டும் விஷாலை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இதன் மூலம் மீண்டும் மதகஜராஜா கூட்டணி இணைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதத்தில் தொடங்க சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
விஷால், சுந்தர் சி கூட்டணியில் உருவான ‛மதகஜராஜா' படம் 12 ஆண்டுகளுக்கு முன் உருவானது. பல்வேறு பிரச்னைகளால் முடங்கி இருந்த படம் இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகி இந்தாண்டின் முதல் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.