விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

சமீபத்தில் 71வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் மோகன்லால் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசும்போது, மோகன்லால் நடித்த வானப்பிரஸ்தம் மற்றும் கர்ணாபரம் ஆகிய இரண்டு படங்களில் அவரது நடிப்பு குறித்து பாராட்டி பேசினார். கேரளா வந்த மோகன்லாலிடம் செய்தியாளர்கள் இந்த இரண்டு படங்களை ஜனாதிபதி குறிப்பிட்டு பேசியது எதனால் என கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மோகன்லால், “இந்த இரண்டு படங்களுமே கிளாசிக்கல் கலையை அடிப்படையாகக் கொண்டவை. அதில் ஒன்று சமஸ்கிருத ட்ராமா. இன்னொன்று முப்பரிமாண கலை வடிவத்தைக் கொண்டது. பெரும்பாலானோர் இதை திரைப்படங்களில் பயன்படுத்துவதில்லை. அதான்ல இந்த இரண்டு படங்களையும் அவர் குறிப்பிட்டு பேசியிருக்கலாம்” என்றார்.




