என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
மலையாளத்தில் கடந்த வருடம் பிரித்விராஜ் மற்றும் பசில் ஜோசப் இருவரும் நடித்த குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றது. இதை விபின் தாஸ் இயக்கியிருந்தார். இதற்கு முன்னதாக அவர் பெண் அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்து இயக்கிய ஜெய ஜெய ஜெய ஜெய ஹே திரைப்படம் வரவேற்பு பெற்றது. இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக மீண்டும் பிரித்விராஜை வைத்தே சந்தோஷ் டிராபி என்கிற படத்தை இயக்குகிறார்.
இதற்கு முன்பு குருவாயூர் அம்பல நடையில் படம் காமெடி மற்றும் கமர்சியல் அம்சங்களுடன் வெளியானது. ஆனால் இந்த சந்தோஷ் ட்ராபி படத்தை இயக்குனரின் விருப்பப்படி அவரது படமாக உருவாக்கும்படி நடிகர் பிரித்விராஜ் அன்பு கட்டளை போட்டு விட்டாராம். அதனால் அதற்கேற்றபடி இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் விபின் தாஸ்.
இதில் ஒரு புதிய விஷயமாக கிட்டத்தட்ட 60 புதுமுக நடிகர்கள் பிரித்விராஜுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். இது விளையாட்டு சம்பந்தமான படம் என்பதால் இத்தனை புதுமுக நடிகர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.