ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

தமிழில், ஈஸ்வரன், பூமி, கலகத்தலைவன் போன்ற படங்களில் நடித்த நிதி அகர்வால், தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு ஹரி ஹர வீரமல்லு என்ற படத்தில் பவன் கல்யாணுடன் நடித்திருந்தார். தற்போது பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் மாளவிகா மோகனன், ரித்திகா குமார் ஆகியோரும் நாயகிகளாக நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிதி அகர்வால், சங்கராந்திக்கு வெளிவரும் இந்த படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி, இதன்பிறகு தெலுங்கில் மூன்று படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறேன். தி ராஜா சாப் படம் திரைக்கு வந்த பிறகு அந்த படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.




