பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

தமிழில், ஈஸ்வரன், பூமி, கலகத்தலைவன் போன்ற படங்களில் நடித்த நிதி அகர்வால், தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு ஹரி ஹர வீரமல்லு என்ற படத்தில் பவன் கல்யாணுடன் நடித்திருந்தார். தற்போது பிரபாஸின் தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் மாளவிகா மோகனன், ரித்திகா குமார் ஆகியோரும் நாயகிகளாக நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிதி அகர்வால், சங்கராந்திக்கு வெளிவரும் இந்த படம் தனக்கு திருப்பு முனையாக அமையும் என்று தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி, இதன்பிறகு தெலுங்கில் மூன்று படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறேன். தி ராஜா சாப் படம் திரைக்கு வந்த பிறகு அந்த படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்கிறார்.




