நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

தமிழில் சித்திரம் பேசுதடி மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை பாவனா. அதனைத் தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் இவர் நடித்துள்ள அனோமி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் நடிகை பாவனா வரும் கேரள சட்டசபைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பாக போட்டியிடப் போகிறார் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
சமீபத்தில் அனோமி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாவனாவிடம் இது குறித்து நேரடியாகவே கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாவனா, “இந்த செய்தியை நானும் பார்த்தேன். ரொம்பவே வேடிக்கையாக இருந்தது. பார்த்ததுமே சிரிப்பு வந்தது. யார் இப்படி எல்லாம் ஒரு கதையை உருவாக்கி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த செய்தியில் கொஞ்சம் கூட உண்மை இல்லை” என்று பதில் அளித்து இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாவனா.