விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் |

கடந்த வருடம் தமிழில் வெளியான 'தங்கலான்' மற்றும் மலையாளத்தில் வெளியான 'உள்ளொழுக்கு' ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் நடிகை பார்வதி. தற்போது அவர் மலையாளத்தில் 'பிரதம திருஷ்ய குற்றக்கார்' மற்றும் 'ஐ நோபடி' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 'ஐ நோபடி' படத்தின் படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார் பார்வதி. இந்த படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார். கடந்த 2018ல் வெளியான மை ஸ்டோரி மற்றும் கூடே என இரண்டு படங்களில் பிரித்விராஜுடன் இணைந்து நடித்திருந்த பார்வதி ஏழு வருடங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். மம்மூட்டி நடித்த ரோஷாக் படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இன்று படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பார்வதி, “மனித கதைகளை சொல்ல ஒன்றிணையும் குழுக்களில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்புகளை நான் ஒருபோதும் நிராகரித்தது இல்லை.. ஐ நோபடி படப்பிடிப்பு தளத்தில் என்ன ஒரு நெகிழ்ச்சியான கடைசி நாள்.. கட்டாயம் சொல்லப்பட வேண்டிய இந்த கதையை தயாரித்ததற்காக அதில் என்னை ஒரு அங்கமாக மாற்றியதற்காக தயாரிப்பாளர் சுப்ரியா பிரித்விராஜுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.