அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

கடந்த வருடம் தமிழில் வெளியான 'தங்கலான்' மற்றும் மலையாளத்தில் வெளியான 'உள்ளொழுக்கு' ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் நடிகை பார்வதி. தற்போது அவர் மலையாளத்தில் 'பிரதம திருஷ்ய குற்றக்கார்' மற்றும் 'ஐ நோபடி' என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் 'ஐ நோபடி' படத்தின் படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார் பார்வதி. இந்த படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார். கடந்த 2018ல் வெளியான மை ஸ்டோரி மற்றும் கூடே என இரண்டு படங்களில் பிரித்விராஜுடன் இணைந்து நடித்திருந்த பார்வதி ஏழு வருடங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அவருடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார். மம்மூட்டி நடித்த ரோஷாக் படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இன்று படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பார்வதி, “மனித கதைகளை சொல்ல ஒன்றிணையும் குழுக்களில் ஒரு பகுதியாக இருப்பதற்கான வாய்ப்புகளை நான் ஒருபோதும் நிராகரித்தது இல்லை.. ஐ நோபடி படப்பிடிப்பு தளத்தில் என்ன ஒரு நெகிழ்ச்சியான கடைசி நாள்.. கட்டாயம் சொல்லப்பட வேண்டிய இந்த கதையை தயாரித்ததற்காக அதில் என்னை ஒரு அங்கமாக மாற்றியதற்காக தயாரிப்பாளர் சுப்ரியா பிரித்விராஜுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.




