Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம்

04 ஜூன், 2025 - 01:56 IST
எழுத்தின் அளவு:
Parvathy-Thiruvothu-Questions-Kerala-CMs-Silence-On-Hema-Committee-Report


கடந்த வருடம் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, மலையாளத் திரை உலகில் பெண்கள், குறிப்பாக நடிகைகள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர் என்கிற விஷயத்தை உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து வெளிப்படையாக சில நடிகைகள், சில நடிகர்கள் இயக்குனர்கள் மீது குற்றம் சாட்டினார்கள். சில வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, சில கைதுகளும் நடந்தன. இது தவிர ஹேமா கமிட்டி பல பேரிடம் வாக்குமூலமும் பெற்றதும் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தது, அதன் அடிப்படையிலும் பல வழக்குகள் பதியப்பட்டன. இப்படி கிட்டத்தட்ட 40 வழக்குகள் பதியப்பட்டு நிலையில் தற்போது அவற்றில் 35 வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டதாக கூறி போலீசார் அந்த வழக்குகளை அவசர அவசரமாக முடித்துள்ளனர்.

நடிகர்கள் சித்திக், முகேஷ், மணியன் பிள்ள ராஜு, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட ஐவர் மீதான வழக்குகள் மட்டும் நிலுவையில் இருக்கின்றன. போலீசார் அவசரமாக வழக்குகளை முடித்ததாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் ஹேமா கமிட்டி விசாரணையின் போது பல பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியவர்கள் யாருமே நேரடியாக இந்த வழக்கில் சாட்சியங்களை சொல்லவோ, அடுத்த கட்டத்திற்கு இந்த வழக்கை நடத்திச் செல்லவும் முன்வராமல் ஒதுங்கி விட்டனராம். இதனாலேயே இந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.

அதே சமயம் இப்படி ஹேமா கமிட்டி விசாரணை குழு உருவாவதற்காக, கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக குரல் கொடுத்த நடிகைகளில் பார்வதியும் ஒருவர்.. ஹேமா கமிஷன் அறிக்கை தாமதமாக வெளியானாலும் அதன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார், தற்போது இந்த வழக்குகள் அவசரமாக மூடப்பட்டதை தொடர்ந்து தனது விரக்தியை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தியுள்ளார், பார்வதி.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''இந்தக் குழு அமைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தைப் பற்றி இப்போது நாம் கவனம் செலுத்தலாமா?? கொள்கைகளை வரையறுப்பதன் மூலம் இந்த துறையில் நடைமுறைகளை கொண்டு வர முடியுமா? அதில் என்ன நடக்கிறது? ஒன்றும் அவசரமில்லை தானே? அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஐந்தரை ஆண்டுகள் மட்டுமே தானே ஆகிறது?'' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா?ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in