கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

தமிழில் சசி இயக்கிய 'பூ' என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. அதன் பிறகு தனுசுடன் 'மரியான்', கமலுடன் 'உத்தம வில்லன்', விக்ரமுடன் 'தங்கலான்' உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஊடகங்களில் அவர் சொல்லும் கருத்துக்கள் அவ்வப்போது மலையாள திரை உலகில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தனது கருத்துக்கள் சர்ச்சையாவது ஏன் என்பது குறித்து தற்போது ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார் பார்வதி. அதில், ''என்னை பொருத்தவரை என் மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுகிறேன். இப்படி நான் சொல்லும் கருத்துக்கள் தான் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதற்காக நான் உண்மையை மறைத்து பொய்யாக பேச ஒரு போதும் விரும்பியதில்லை. மற்றவர்களிடம் என்னை நல்லவராக காட்ட வேண்டும் என்பதற்காக நிஜத்தை மறைத்து போலியான முகமூடியை அணிந்து கொள்ள நான் தயாராக இல்லை. அந்த வகையில் நான் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாமலிருப்பதே என் மீதான விவாதங்களுக்கு காரணம்,'' என்று தெரிவித்திருக்கிறார் பார்வதி.