பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

தமிழில் சசி இயக்கிய 'பூ' என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி. அதன் பிறகு தனுசுடன் 'மரியான்', கமலுடன் 'உத்தம வில்லன்', விக்ரமுடன் 'தங்கலான்' உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் ஊடகங்களில் அவர் சொல்லும் கருத்துக்கள் அவ்வப்போது மலையாள திரை உலகில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தனது கருத்துக்கள் சர்ச்சையாவது ஏன் என்பது குறித்து தற்போது ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார் பார்வதி. அதில், ''என்னை பொருத்தவரை என் மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசுகிறேன். இப்படி நான் சொல்லும் கருத்துக்கள் தான் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. அதற்காக நான் உண்மையை மறைத்து பொய்யாக பேச ஒரு போதும் விரும்பியதில்லை. மற்றவர்களிடம் என்னை நல்லவராக காட்ட வேண்டும் என்பதற்காக நிஜத்தை மறைத்து போலியான முகமூடியை அணிந்து கொள்ள நான் தயாராக இல்லை. அந்த வகையில் நான் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாமலிருப்பதே என் மீதான விவாதங்களுக்கு காரணம்,'' என்று தெரிவித்திருக்கிறார் பார்வதி.