திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் | 'காந்தாரா' பாணியில் உருவாகும் 'மகாசேனா' | பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம் | பிளாஷ்பேக்: தம்பியை இயக்குனராக்கி அழகு பார்த்த அக்கா | மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! |
தமிழ் சினிமாவில் மூத்த நடிகை வடிவுக்கரசி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 400 படங்கள் நடித்துள்ளார். சில படங்களில் நாயகியாகவும், பல படங்களில் வில்லி மற்றும் குணச்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். இன்றைய தலைமுறை நடிகர்களுடனும் நடித்து வரும் இவர் சினிமா தவிர்த்து நிறைய சீரியல்களிலும் நடிக்கிறார்.
இன்றைக்கு சினிமாவில் நடிக்க ஆசைப்படுவர்களுக்கு சமூக வலைதளங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன. குறிப்பாக பிரபலங்கள் நடித்ததை, நடனம் ஆடியதை ரீல்ஸாக போட்டு பிரபலமாகி சினிமாவிலும் சிலர் வாய்ப்பை பெற்றுள்ளனர். உதாரணத்திற்கு நடிகை மிருணாளினி ரவியை கூறலாம். இந்நிலையில் ரீல்ஸ் பிரபலங்கள் சினிமாவில் திணறுவதாக வடிவுக்கரசி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛இன்றைக்கு நிறைய பேர் ரீலீஸ் பண்றாங்க. அவர்களுக்கு இருக்கும் நிறைய பாலோயர்களை பார்த்து சில இயக்குனர்கள் சினிமாவில் வாய்ப்பு தராங்க. பெரிய பெரிய நடிகர்கள் நடிச்சத, பாட்டு பாடியத இவுங்க எடுத்து ரீல்ஸ் போடுறாங்க. ஆனால் அவர்களுக்கென்று ரியல் டயலாக் கொடுத்து பேச சொன்னால் திணறுறாங்க. நான் நடிக்கும் படங்களில் இதை பார்த்து சில இயக்குனர்களிடம் கேட்டுள்ளேன். அதற்கு இயக்குனர்கள் அவர்களுக்கு ஆயிரம் பாலோயர்கள் இருக்காங்கன்னு சொல்றாங்க. இவர்கள் திணறுவதால் எல்லோருடைய நேரமும், பணமுமே வீணாகிறது. ரீல்ஸ் வந்து பொழுபோக்குக்காக செய்வது. ஆயிரம் பாலோயர்கள் அதுவரை தான் இருப்பாங்க'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.