விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

'மெஹந்தி சர்க்கஸ்' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் சார்ந்த ரியாலிட்டி ஷோ மூலம் இன்னும் பிரபலமானார். அதன் பிறகு படங்களில் நடிப்பதை விட கேட்டரிங் தொழிலில் பிசியான மாதம்பட்டி ரங்கராஜ், பல பிரபலங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கும் கேட்டரிங் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். ஏற்கனவே அவருக்கு ஸ்ருதி என்கிற மனைவி இருந்த நிலையில் அவர் ஆடை அலங்கார நிபுணரான ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் தகவலும் புகைப்படங்களும் வெளியாகின.
இந்த புகைப்படங்களை வெளியிட்டு இதை அறிவித்த ஜாய் கிரிசில்டா சில மாதங்கள் கழித்து மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறி போலீஸ் நிலையத்திலும் மகளிர் ஆணையத்திலும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணை மகளிர் ஆணையத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தான் நிறை மாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தனக்கும் தன் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.