பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சமீபத்தில் 2024ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்த முறை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஆண், பெண் என இரண்டு பிரிவுகளிலும் யாருக்கும் விருது வழங்கப்படவில்லை. இது மலையாள திரையுலைகிலும் ரசிகர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விருதுக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரகாஷ்ராஜ் இது குறித்து கூறும்போது, “குழந்தைகளுக்கான படம் வருவதில்லை என்கிற வருத்தம் இருக்கிறது.. குழந்தைகளுக்கான படம் எடுப்பதை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்” என்று ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி வெற்றியை பெற்ற மாளிகைப்புரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுமி தேவ நந்தா பிரகாஷ்ராஜின் விளக்கம் குறித்து கடும் சீற்றத்துடன் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் உங்கள் கண்களை மூடி கொண்டிருக்கலாம். அதற்காக இங்கே எல்லாமே இருட்டாக இருக்கிறது என்று சொல்லக்கூடாது. குழந்தைகளும் இந்த சமூகத்தில் ஒரு பாகம் தான். இந்த 2024 மலையாள சினிமா விடுதலைப் பொறுத்தவரை தலைமை தன்னுடைய கண்களை மூடிக்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த வருடம் ஸ்தானர்த்தி ஸ்ரீ குட்டன், கு, பீனிக்ஸ் மற்றும் அஜயன்டே ரெண்டாம் மோசனம் உள்ளிட்ட நான்கு படங்கள் இந்த பிரிவுகளில் தேர்வாகும் அம்சங்களுடன் இருந்தும் அதை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை. இரண்டு குழந்தைகளுக்கான விருதுகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு பின் எப்படி நீங்கள் குழந்தைகளுக்கான படங்களை எடுக்க வேண்டும், அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள்..? அந்த இரண்டு குழந்தைகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்திருந்தால் அதுதானே மற்றும் பலருக்கு உந்து சக்தியாக இருந்திருக்கும்” என்று கூறியுள்ள அவர், “ஜூரியின் இந்த முடிவு மட்டுமல்ல, இதை செய்துவிட்டு குழந்தைகளுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று சொல்லி இருப்பது தான் என் மனதை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.