லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமாவில் நடிப்பதோடு அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். மத்திய அரசு மற்றும் பா.ஜ.விற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். அதோடு இந்து மதம், இந்து கடவுள்கள், இந்து பண்டிகைகள் குறித்தும் விமர்சித்து வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் சனாதன தர்மம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ்ராஜ் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், 'சனாதன தர்மம் குறித்து தான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது. மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.