மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

ஹிந்தியில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‛சிக்கந்தர்'. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அந்த படத்தை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‛மதராஸி' என்ற படத்தை இயக்கி இருக்கிறார் முருகதாஸ். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சிக்கந்தர் படத்தின் தோல்விக்கு சல்மான்கானே காரணம் என்பது போல் கூறியுள்ளார்.
அதாவது, ‛‛சல்மான்கானுடன் பணிபுரிவது அத்தனை எளிதான காரியம் அல்ல. பெரும்பாலும் அவர் படப்பிடிப்பின் போது தாமதமாகதான் வருவார். பகலில் திட்டமிட்டபடி படமாக்க முடியாமல் செயற்கை விளக்குகள் மூலம்தான் அவரது காட்சிகளை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவற்றை எல்லாம் சிஜி மூலம் சரி செய்தோம். இதற்கெல்லாம் மேலாக இந்த படத்தின் கடைசி நேரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இதுதான் அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது'' என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ்.




