என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

ஹிந்தியில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‛சிக்கந்தர்'. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. அந்த படத்தை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‛மதராஸி' என்ற படத்தை இயக்கி இருக்கிறார் முருகதாஸ். இந்நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், சிக்கந்தர் படத்தின் தோல்விக்கு சல்மான்கானே காரணம் என்பது போல் கூறியுள்ளார்.
அதாவது, ‛‛சல்மான்கானுடன் பணிபுரிவது அத்தனை எளிதான காரியம் அல்ல. பெரும்பாலும் அவர் படப்பிடிப்பின் போது தாமதமாகதான் வருவார். பகலில் திட்டமிட்டபடி படமாக்க முடியாமல் செயற்கை விளக்குகள் மூலம்தான் அவரது காட்சிகளை படமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவற்றை எல்லாம் சிஜி மூலம் சரி செய்தோம். இதற்கெல்லாம் மேலாக இந்த படத்தின் கடைசி நேரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இதுதான் அந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது'' என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ்.