பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்துள்ள கூலி படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்றாலும் நான்கு நாட்களில் இந்த படம் 400 கோடி வசூலை கடந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தக் கூலி படத்தின் வசூல் எப்படி உள்ளது? என்பது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛கூலி படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களித்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டு மற்ற ரசிகர்களும் தியேட்டருக்கு வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்கள் மட்டுமின்றி விடுமுறை முடிந்த பிறகும் தியேட்டர்களில் 80 சதவீதம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் கூலி படம் குறித்து வெளியான நெகட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்தின் வசூலை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
அதோடு விமர்சகர்கள் படத்தை குறை சொன்னாலும் ரசிகர்கள் எந்த குறையும் சொல்லவில்லை. ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்றால் நேற்று திங்கட்கிழமை கண்டிப்பாக ரசிகர்களின் வருகை குறைந்திருக்கும். ஆனால் நேற்றும் அதற்கு முந்தைய மூன்று நாட்களைப் போன்றே கூட்டம் இருந்தது. அதனால் விமர்சனங்களை கடந்து கூலி படம் நல்ல முறையில் வசூலித்து வெற்றி பெறும்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.