பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

காஷ்மீரின், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ஆந்திராவை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார். இவரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க உள்ளனர்.
தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் அவரின் வேடத்தில் தெலுங்கு பிக்பாஸில் பங்கேற்று பிரபலமான கவுதம் கிருஷ்ணா நடிக்கிறார். விஷான் பிலிம் பேக்ட்ரி சார்பில் சுரேஷ் பாபு தயாரிக்கிறார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட எண்ணி உள்ளனர். இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. முரளி நாயக்கின் குடும்பத்தாரிடம் முறையாக அனுமதி பெற்று இந்த படத்தை எடுக்கின்றனர்.
ஹீரோ கவுதம் கிருஷ்ணா கூறுகையில், ‛‛இது படம் அல்ல, நிஜ ஹீரோவின் கதை. இதுவரை தெலுங்கு சினிமாவில் தனி ராணுவ வீரர் தொடர்பான படம் வெளியாகவில்லை. இதுதான் முதல்முறை. முரளி நாயக்கின் கதை இந்த உலகத்திற்கு சொல்லப்பட வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் இதில் முக்கிய இடம் பெறுகிறது. அந்த போரில் பங்கேற்று உயிர்நீத்த அவரை பற்றி இந்த உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படியொரு வலுவான கதையில் நான் நடிப்பதை அதிர்ஷ்டமாக உணருகிறேன்'' என்றார்.