ரயில் பைட், ஆட்டமா தேரோட்டமா... : ‛கேப்டன் பிரபாகரன்' மலரும் நினைவில் ஆர்.கே.செல்வமணி | 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் ரத்தாகுமா ? | 'கேப்டன் பிரபாகரன்' காட்சியைக் காப்பியடித்த 'புஷ்பா 2' | ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமா... : கோலிவுட் தகவல் என்ன...? | 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ‛சாம்ராஜ்யம்' | ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பழிவாங்கும் கதையில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ் | 6 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் செய்த கன்னட படம் ; காந்தாராவுக்கு பின் அடுத்த சாதனை | ஆஸ்கர் புகழ் நாட்டு நாட்டு பாடகருக்கு திருமண நிச்சயதார்த்தம் | நடிகர் விஷ்ணுவர்தனின் புதிய நினைவிடத்திற்காக இலவசமாக நிலம் வழங்கிய கிச்சா சுதீப் | வார் 2 : 300 கோடி வசூலித்ததாக அறிவிப்பு |
கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேத்துப்பாறை கிராம தலைவர் மகேந்திரன் புகார் ஒன்றை தெரிவித்தார். கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹாவும், பாரதி அண்ணா நகரில் நடிகர் பிரகாஷ்ராஜூவும் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி வருவதாகவும், பிரகாஷ்ராஜ் சிமெண்டு சாலை அமைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அனுமதி இன்றி புதிய வீடு கட்டப்பட்டு வருவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.